டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னகத்து லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி நாளை(அக்.9 - தெலுங்கில்) வெளியாகிறது. குணசேகரன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராணா, அல்லு அர்ஜுன், காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா, அதிதி செங்கப்பா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவின் காக்கத்தியா சாம்ராஜ்யத்தை ஆண்ட ராணியின் சரித்திர கதை. சுமார் 75 கோடியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். நாளை உலகம் முழுவதும் வெளிவந்தாலும் தமிழில் வருகிற 16ந் தேதிதான் வெளிவருகிறது.
கடுமையாக உழைத்துள்ள ருத்ரமாதேவி படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடிகை அனுஷ்கா நேற்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். அவருடன் படத்தின் இயக்குனர் குணசேகர் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றனர். படத்தின் முதல் பிரதியை (கியூப் டிஷ்க்) ஏழுமலையானின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா "எல்லோருடைய கடின உழைப்பில் ருத்ரமாதேவி உருவாகி உள்ளது. இதன் வெற்றியில் பலரின் வாழ்க்கை உள்ளது. அதனால் வெற்றி பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தோம்" என்றார்.