தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள படம் மசாலாபடம். இதில் மிர்ச்சி சிவா, பாபிசிம்ஹா, கவுரவ், லட்சுமிதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் இணைய தளங்களில் சினிமா விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் பற்றியது. படத்தின் கதையை இயக்குனர் லக்ஷ்மணன் குமார் எழுதியுள்ளார் அதற்கு அவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருப்பவர் ஹீரோயினாக நடித்துள்ள லக்ஷ்மிதேவி.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் என்னுடைய பயணத்தை ஒரு மாடலாக தான் துவங்கினேன். மசாலா படத்தின் இயக்குனர், நடிகர்கள் அனைவரும் என் நண்பர்கள். லக்ஷ்மண் குமாருக்கு திரைக்கதையில் உதவலாம் என்றுதான் சென்றேன். என்னை நடிகையாக அறிமுகம் செய்து விட்டார்கள். சகல மசாலாக்களும் நிறைந்த மசாலா படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குனர் லக்ஷ்மன் எடுத்துக் கொண்ட இந்த புதிய கதை களம் நிச்சயம் வெற்றி பெரும் .சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனம் செய்வோரை பற்றிய படம் என்பதால் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் பார்த்து எத்தனை பேர் லைக் பண்ண போறாங்க , எத்தனை பேர் கமெண்ட் பண்ண போறாங்க என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். என்கிறார் லக்ஷ்மி தேவி.