சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தமுறை அங்காளி - பங்காளி சண்டையாக மாறியிருக்கிறது. சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். அதிலும் நேற்று உச்சகட்டமாக நடிகர் சிம்பு பேசும்போது மிகவும் அநாகரீகமாக விஷாலுக்கு கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது, யாருடா நீ... என்பது போன்று ஒருமையில் பேசினார். அத்துடன் எதிரணியினர் நாய் போல் அல்ல நரி போல செயல்படுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இதுஒருபுறம் இருக்க இந்த இரு அணியினரையும் சமரசம் செய்ய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெப்சி உள்ளிட்ட சங்கங்கள் முயற்சி வருகிறது. ஆனால் இதற்கு விஷால் உடன்படவில்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் விஷால் அணியான பாண்டவர் அணியினர் தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்களிடம் ஓட்டு வேட்டை நடத்தி சென்னையில் இருந்து நேற்று முதல் தங்களது பயணத்தை தொடங்கினர். முதற்கட்டமாக இன்று விஷால் அணியினர் சேலம் வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்தனர் விஷால் அணியினர்.
விஷால் பேசும்போது... சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஒவ்வொரு ஊராக சென்று நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்க உள்ளோம். இதற்கு அடுத்து ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. எதிரணியினர் சொல்வது போன்று இது ரசிகர்கள் கூட்டம் கிடையாது. நடிகர் சங்கம் அட்டை வைத்துள்ள உறுப்பினர்கள் தான் இதில் பங்கேற்க உள்ளார்கள்.
வாபஸ் கிடையாது
நடிகர் சங்கம் பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் சமரசம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் தேர்தலில் இருந்து ஒருபோதும் வாபஸ் பெற முடியாது. அக்டோபர் 18ம் தேதி திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும். எங்களுக்கு தான் ஓட்டளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை, ஓட்டளிப்பது உங்களது உரிமை. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அனைத்து உறுப்பினர்களும் ஓட்டளியுங்கள்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது
தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட எல்லா சங்கங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. அதேப்போன்று நடிகர் சங்கத்திற்கும் ஏன் தேர்தல் நடைபெற கூடாது. தேர்தலில் நிற்பது ஜனநாயக உரிமை, மேலும் ஒரு நடிகன் என்ற முறையில் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. சங்க நலனுக்காக மட்டும் தான் போட்டியிடுகிறோம். மேலும் எஸ்பிஐ. சினிமாஸ் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் கிடையாது. மூன்று ஆண்டுகளாக நாங்கள் கேள்வி கேட்கிறோம், அதற்கு முறையான பதில் இல்லை. அப்போது எல்லாம் பதில் சொல்லாதவர்கள், சமரசம் பேச முயற்சிக்காதவர்கள், இப்போது ஏன் சமரசத்திற்கு வருகின்றனர்.
பாக்யராஜ் அந்த அணிக்கு சென்றது வருத்தமில்லை
நடிகர் சங்கத்தில் நான் பிளவு ஏற்படுத்தவில்லை, பிளவு ஏற்படுத்துவதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஏற்க முடியாது. யார் குடும்பத்தையும் சிதைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. பாக்யராஜ் அந்த அணிக்கு சென்றது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.
முதல்வர் ஜெயலலிதா ஓட்டளித்தால் மிகப்பெரிய மகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதா கெளரவ உறுப்பினராக இருக்கிறார். அவர் வந்து இந்த தேர்தலில் ஓட்டளித்தால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் தான். ஒருவேளை நாங்கள் தேர்தலில் தோற்றாலும் அதைப்பற்றி கவலையில்லை, தொடர்ந்து சங்க நலனுக்காக ஒற்றுமையாக நாங்கள் பாடுபடுவோம், எங்களுக்கு சங்க நலமே முக்கியம்.
இவ்வாறு விஷால் பேசினார்.