தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தமுறை நீயா-நானா என்கிற அளவுக்கு பெரும் போட்டிக்களமாகியிருக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் இரண்டு அணியினர் மோதிக்கொண்டபோதும், தேர்தலுக்கு பிறகு அவர்கள் தோள் போட்டுக்கொண்டனர். ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள போட்டியாளர்களுக்கிடையே நட்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிற நிலைதான் உருவாகியிருக்கிறது.
இதன்காரணமாக, நடிகர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிளவை நீக்கி நட்பு மலர வைக்கும் முயற்சியாக சமரச குழு ஒன்றை தமிழ்த்திரையுலகினர் ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் சரத்குமார்- விஷால் என்ற இரண்டு அணியினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதனால் அதன்பிறகு இதற்கு முந்தைய நடிகர் சங்க தேர்தல் நடந்தது போன்று சுமூகமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்று திரையுலகினரும் கருதிக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகர் சங்க தேர்தல் விசயத்தில் நாங்கள் சமரசத்திற்கு தயாராக இல்லை. திட்டமிட்டபடி தேர்தலை சந்திப்போம். மேலும், நடிகர் சங்கத்தை உடைக்க எங்களுக்கு பின்னால் இருந்து சிலர் தூண்டிவிட்டு வருவதாக எதிரணியினர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார். விஷாலின் இந்த பேச்சு, சமரச முயற்சி நடப்பதற்கு முன்பே அதற்கு முட்டைக்கட்டை போட்டது போலாகியிருக்கிறது.