ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்து உள்ள, 'குவான்டிகோ' என்ற அதிரடியான ஆங்கில தொலைக்காட்சி தொடர், ஏ.பி.சி., 'டிவி'யில், ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எப்.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார் பிரியங்கா. இந்திய நடிகை ஒருவர், அமெரிக்க டிவி தொடரில், மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், பாலிவுட் பிரபலங்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைக்கின்றனர். 'டுவிட்டர், பேஸ்புக்' என, சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகளால், திக்கு முக்காடிப் போயுள்ளார் பிரியங்கா. அடுத்ததாக, அவர் நடித்துள்ள,'பஜிரோ மஸ்தானி' என்ற இந்தி படம், டிசம்பரில் திரைக்கு வருகிறது. இதில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே போன்றோர் நடித்திருந்தாலும், பிரியங்காவுக்கு தான் முக்கியமான வேடம். மேலும், இந்த படம் வெளியாகும் அதே நாளில், ஷாரூக் - கஜோல் இணைந்து நடித்துள்ள, 'தில்வாலே' என்ற படமும், வெளியாகவுள்ளது.