மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் சங்கம் பிரச்னையில் ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் களத்தை விட நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பறக்கிறது. நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதில் நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பாக சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் விஷால் அணியினர். அதேசமயம் விஷால் அணியினரின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதோடு, விஷால் அணியினரையும் விமர்சனம் செய்து வருகின்றனர் சரத்குமார் அணியினர்.
இந்நிலையில் சரத்குமார் அணியினர், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா... நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தேவையில்லாமல் விஷால் அணியினர் குற்றம் சுமத்துகின்றனர். அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நடிகர் சங்க கட்டடத்தை இடிக்கும்போது ஏன் நீங்கள்(விஷால் அணியினர்) வரவில்லை. விஷால் - கார்த்தி அணியினருக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார். அவர் தான் இவர்களை தூண்டிவிடுகிறார். நடிகர் சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது என்று பேச ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஏன் முன்வரவில்லை. கமலை கேட்டால் சர்ச்சைக்குள் வர விரும்பவில்லை என்று கூறுகிறார்.
நடிகர்களாகிய நாம் எல்லாம் ஒரு குடும்பம். நடிகர் சங்கத்தை குலைக்க வேண்டாம் என்று விஷாலை கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை ராதிகா கூறினார்.