பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இரண்டாவதாக வெளிவந்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் படத்தை வாங்கியவர்களுக்கு அதிக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இளைஞர்களுக்காகவே எடுக்கப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் என்று சொல்லப்பட்டாலும் படம் வெளிவந்த பின் இவ்வளவு ஆபாசமாகவா ஒரு படத்தை எடுப்பது என்று பல திசைகளிலிருந்தும் இயக்குனருக்கு விமர்சனங்கள் பறந்தன. நல்ல பெயரை வாங்கி வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படிப்பட்ட படத்தில் நடித்து அவருடைய இமேஜைக் கெடுத்துக் கொண்டாரே என்றும் சொல்லப்பட்டது.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஓடும் தியேட்டர்கள் பக்கம் குடும்பத்தினர் யாருமே தலை காட்டவேயில்லை. அதே போலவே ஜி.வி.பிரகாஷும் அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் படத்தைக் காட்டவில்லையாம். குறிப்பாக அவருடைய மனைவியான பின்னணிப் பாடகி சைந்தவி இதுவரை படத்தைப் பார்க்கவில்லை என்கிறார்கள். இது பற்றி ஜிவியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அவருடைய தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமானைப் படம் பார்க்க அழைத்ததாகவும், படம் பற்றி நான் கேள்விப்பட்டேன், வேறு ஏதாவது நல்ல படத்தில் கூப்பிடு வந்து பார்க்கிறேன் என அவர் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
தான் நடித்த படத்தையே தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்க வைக்க முடியாத அளவிற்கு ஒரு படத்தில் நடித்து விட்டோம் என ஜி.வி.பிரகாஷ்குமார் இனியாவது உணர்ந்தால் சரி.