'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் மூலம் தயாரித்து, இசையமைத்து, பாடல்கள் எழுதி நடித்துள்ள படம் அதிரடி. பெப்சி தொழிலாளர்கள் உதவியின்றி எடுக்கப்பட்ட முதல் படம். பாலு ஆனந்த் இயக்கி உள்ளார். மவுமிதா சவுத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாரும் வரவில்லை.
விழாவில் பாடல்களை வெளியிட்டு நாசர் பேசியதாவது: மன்சூரலிகான் துணிச்சலான நடிகர். யாருக்கும் பயப்படமாட்டார். அவர் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இருக்காது. வார்த்தையில் கோபம் இருந்தாலும் மனதில் அன்பு இருக்கும். சில படங்களில் என்னை அவரைப்போல இமிடேட் செய்து நடிக்க சொன்னார்கள். நானும் முயற்சித்து பார்தேன், என்னால் முடியவில்லை. யாராலும் காப்பி அடிக்க முடியாத நடிகர் அவர். எல்லோரையும் சிரிக்க வைக்கிற அவர் கஷ்டத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ள மாட்டார்.
இவ்வாறு நாசர் பேசினார்.