ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெளுத்துக்கட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் அருந்ததி. அதன்பிறகு நேற்று இன்று, நாய்கள் ஜாக்கிரதை உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் அர்த்தநாரி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராம்குமார் நடிக்கிறார். இவர்கள் தவிர நாசர், நான் கடவுள் ராஜேந்திரன், சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் தயாரிக்கிறார். சுந்தரா இளங்கோவன் இயக்குகிறார். செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார். ஸ்ரீரஞ்சன்ராவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் கதை தற்கொலை செய்து கொண்டு இறந்த போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியாவின் கதை என்று இண்டஸ்ரியில் பேசிக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் சந்த்ரா இளங்கோவன் அளித்துள்ள விளக்கம்... ''சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து உள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றும் நீடித்தாலும் , தொழில் துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவல கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. காவல் துறைக்கு பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் போலீஸ் அதிகாரிக்கு நேரும் சோதனைகளும் அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதைதான் அர்த்தநாரி. தயாரிப்பாளர் முத்தமிழ் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கதை. தற்போது மக்கள் மத்தியிலும் , ஊடகங்கள் மத்தியிலும் பெரிதாக அலசப்படும் ஒரு விஷயத்தை போன்று இருப்பது தற்செயலான விஷயம்தான் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. குறிப்பிட்ட சம்பவத்துக்கு முன்பே நாங்கள் படத்தை தொடங்கிவிட்டோம்.'' என்கிறார் இயக்குனர் சுந்தரா இளங்கோவன்.