தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு டார்லிங் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. அந்த முதல் படமே அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. அதோடு அழகு ராணியான நிக்கி மிரட்டல் பேயாக ரசிகர்களை அச்சுறுத்தினார். அதையடுத்து ஆதியுடன் யாகவராயினும் நாகாக்க படத்தில் நடித்தார். பின்னர் மற்ற மொழிகளில் நடித்து வந்த படங்களை முடித்துக்கொடுப்பதற்காக சென்ற நிக்கி கல்ராணி, தற்போது கோ-2, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் கமிட்டாகி மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இந்த படங்கள் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பதால் டார்லிங் படம் போன்று நிக்கிக்கு பெரிதான வேடம் இல்லையாம். டூயட் பாட மட்டுமே வேலை கொடுத்திருக்கிறார்களாம். அதனால் மறுபடியும் பேய் கதைகளில் நடித்து தமிழில் மார்க்கெட்டை பிடிக்க தயாராகி விட்ட நிக்கி கல்ராணி, டார்லிங் படத்தை முன்வைத்து சுந்தர்.சி போன்ற சில பேய் பட டைரக்டர்களை அணுகி சான்ஸ் கேட்டு வருகிறார். தற்போதைய நிலவரப்படி, தென்னிந்தியாவின் 4 மொழிக்கும் அவர் பரிட்சயமான நடிகை என்பதால் அவரை வைத்து மெகா பட்ஜெட்டில் படம் தயாரிக்க சில டைரக்டர்களும் பரிசீல னையில் இறங்கிவிட்டனர்.