பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ், தெலுங்கு என 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டவர் சமந்தா. ஆனால் இதுவரை அவர் நடித்த வேடங்கள் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்தமானதாக இருந்திருக்கிறது. சமந்தாவைப் பொறுத்தவரை முதலில் ரசிகர்களை திருப்திபடுத்திக்கொள்வோம். அதன்பிறகு நமக்கு திருப்திதரக்கூடிய வேடங்களை செலக்ட் பண்ணி நடிக்கலாம் என்று முடிவில்தான் இருந்து வந்தாராம்.
அந்த வகையில், அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அவர் தனுசுடன் நடித்துள்ள விஐபி-2 படத்தில் சமந்தாவுக்கு கிடைத்திருக்கும் கேரக்டர் அவரை வெகுவாக பாதித்துள்ளதாம். அதாவது சினிமாவுக்கு வந்து ஐந்தாண்டுகளாக நான் ஏங்கிக்கொண்டிருந்த வேடம் இந்த படத்தில்தான் கிடைத்திருக்கிறது என்கிறார் சமந்தா.
அதுகுறித்து அவர் கூறுகையில், அன்பு, பாசம், காதல் என குடும்ப உறவுகளில் உருவாகும் படத்தில் குடும்பப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசையாக இருந்து வந்தது. அதை விஐபி-2 படம்தான் தீர்த்து வைத்திருக்கிறது. அந்த படத்தில் நான் புடவை கட்டிய பெண்ணாக படம் முழுக்க நடித்திருக்கிறேன். மாடர்ன் கெட்டப்பில் தொடர்ந்து நடித்து வந்த எனக்கு இந்த வேடம் ரொம்ப பிடித்திருக்கிறது. என்னைப்பார்த்து நானே ரசித்த வேடம் இதுதான். அதோடு எனது இந்த கெட்டப் இன்னும் பெருவாரியான ரசிகர்களை கவரும் என்று நினைக்கிறேன் என்கிறார் சமந்தா.