பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிவகார்த்திகேயன் எப்படி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்குள் வந்தாரோ அதேபோன்று அதே விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாகி, ''வானவராயன் வல்லவராயன்'' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மா.கா.பா.ஆனந்த். முதல் படம் வெளியான நிலையில், தற்போது அவர் கைவசம் பஞ்சு மிட்டாய், அட்டி, நவரச திலகம் உள்பட 4 படங்கள் உள்ளன.
இதில் நவரச திலகம் விரைவில் வெளியாகயிருக்கிறது. இந்த படத்தில் மா.கா.பாவுடன் இணைந்து கருணாகரனும் நடித்துள்ளார். இந்த படங்களுக்காக கடந்த 4 மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்பில் இருந்ததால் புதிய படங்களுக்கான கதை கேட்பதை தற்காலிமாக நிறுத்தி வைத்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். இந்தநிலையில, அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயனும், மா.கா.பா.ஆனந்தும் இணைந்து நடிக்கும் தல தளபதி என்றொரு படம் தயாராகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி மா.கா.பா.ஆனந்தை கேட்டால், என்னது நான் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறேனா? எனக்கே தெரியாம இப்படியொரு செய்தி ஓடிக்கிட்டிருக்கிறதா? என்று பலத்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். மேலும், சிவகார்த்திகேயன் எனது நண்பர் தான். அவருடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் சந்தோசமே. ஆனால் இப்படியொரு படத்துக்காக இதுவரை யாரும் என்னை அணுகியதில்லை. யாரோ இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.