'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
புலி படம் தொடர்பான போஸ்டரை ஒட்ட சென்ற ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கி பலியாகினர், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். சிம்புத்தேவன் இயக்கத்தில், விஜய், சமந்த, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் புலி. இப்படம் தொடர்பாக சென்னை, தாம்பரத்தை பகுதியை சேர்ந்த விஜய்யின் ரசிகர்களான சவுந்திரராஜன் மற்றும் உதயகுமார் இருவர் போஸ்டர் சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகினர்.
இந்தசம்பவம் குறித்து அறிந்த விஜய், இன்று காலை சம்பந்தப்பட்ட இரண்டு ரசிகர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கியதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த செயல் அவரது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் விஜய்யின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.