தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமா ரசிகர்களின் செவிகளுக்கு அவ்வப்போது சுவையான தீனிபோடும் வேலையைத்தான் தற்போது மூத்த இயக்குனரான கமல் செய்து வருகிறார் என்பது அவரது சமீபத்திய பேச்சுகளில் இருந்து நன்றாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் 'பிரேமம்' படம் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் படத்தை தயாரித்த இயக்குனர் அன்வர் ரஷீத்தும் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என குற்றம் சாட்டினார். அடுத்ததாக சுரேஷ் கோபியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்தார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மம்முட்டி நடித்த 'உட்டோபியாயிலே ராஜாவு' பிளாப் ஆனதும், மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் நடிக்கும் கேரக்டர்களை தேர்வுசெய்ய தெரியவில்லை என்றார்.
இப்போது சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நடிகை மீரா ஜாஸ்மின் பற்றி அடுக்கடுக்காக குறைகளை அடுக்கியுள்ளார். மீரா ஜாஸ்மின் கமல் இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடவடிக்கைகள் எப்போதும் மோசமாகத்தான் இருந்தது என்கிறார் கமல். செட்டுக்கு தாமதமாக வருவது மீரா ஜாஸ்மின் ஹாபி என்றும் மோகன்லாலை கூட காக்க வைக்கும் அளவுக்கு அவரது நடவடிக்கை இருந்தது என்றும் கூறியுள்ளார் கமல்.
ஒருமுறை கமலின் இயக்கத்தில் கிராமபோன் என்கிற படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், அந்தப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு உடையை சரியில்லை என மட்டமாக விமர்சித்தாராம். இத்தனைக்கும் அந்த காஸ்ட்யூம் டிசைனர் தேசியவிருது பெற்றவர் வேறு. அற்ப காரணத்திற்காக அவரை அவமானப்படுத்திய மீரா ஜாஸ்மினை செட்டில் அனைவரின் முன்னிலையில் அந்த காஸ்ட்யூம் டிசைனரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாரம் கமல்.
அதுமட்டுமல்ல மின்னாரக்கூட்டம்' படத்தில் அவர் கொடுத்த டார்ச்சர்களை தாங்க முடியாமல், இனி ஒருபோதும் மீரா ஜாஸ்மினை வைத்து படம் இயக்கப்போவதில்லை என அந்தப்படத்தின் இறுதிநாள் ஷூட்டிங்கில் அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாகவும் அறிவித்தாராம். தான் பார்த்த நடிகைகளிலேயே மனிதர்களை மதிக்காத மிகவும் மோசமான நடத்தை கொண்டவர் மீரா ஜாஸ்மின் தான் என்று குமுறி கொட்டிவிட்டாராம் கமல்.