ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் வெளியான 'முன்னறியிப்பு' படம் மூலமாக நல்ல படங்களை விரும்பும் ரசிகர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியவர் இயக்குனர் வேணு. மம்முட்டியின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய அந்தப்படம் கிட்டத்தட்ட தேசிய விருதை மயிரிழையில் தவறவிட்டது. ஆனால் ரசிகர்கள் யாராலும் குறைசொல்ல முடியாத படமாக அது அமைந்தது. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான வேணு பிரபல இயக்குனர்கள், தங்கள் படத்தில் பணியாற்ற தேடிக்கொண்டிருக்கும் முக்கியமான நபராக இப்போதும் இருக்கிறார்.
இவர்தான் சமீபத்தில் மோகன்லால் சமீபகாலமாக தனது படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து வரும் விதம் பற்றி விமர்சித்துள்ளார். ஆனால் அது மோகன்லாலின் மீதுள்ள அக்கறையால் தான். காரணம் பல வருடங்களுக்கு முன்பே, 'நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்', 'மணிச்சித்திரத்தாழு' ஆகிய படங்களில் ஒரு ஒளிப்பதிவாளராக மோகன்லாலுடன் பணிபுரிந்தவர்தான் இந்த வேணு.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக தேசிய விருது பெற்ற மோகன்லாலின் 'ஸ்பிரிட்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவரே.
அப்படிப்பட்ட நல்ல படங்களையும் கேரக்டர்களையும் தேர்வுசெய்யும் மோகன்லால், சமீபகாலமாக நடிக்கும் படங்களில் ஒரு நாடகத்தனம் தெரிகிறது என்றும், ஒருபக்கம் அது மோகன்லாலின் நடிப்பை சரியாக பயன்படுத்தாத இயக்குனர்களின் தவறு என்றாலும், மோகன்லாலுக்கும் அதில் பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இவர் அடுத்து இயக்குவதற்காக உருவாக்கிவரும் கதையில் நாயகனாக நடிக்க இருப்பதும் சாட்சாத் மோகன்லால் தானாம். இது எப்படி இருக்கு..?