இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்" என்பது ரஜினியின் தத்துவ வசனங்களில் முக்கியமானது. செல்போன் காலர் டியூனாக கூட இந்த வசனம் பிரபலம். தற்போது இந்த தத்துவத்தை மையாக கொண்டு வி என்கிற ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ட்ரூசோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஸ் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் வி.ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்வின், ரினீஷ், ருதியா, தேவசூர்யா, வில்ஜியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அனில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், இளங்கோ கலைவாணன் இசை அமைக்கிறார் டாவின்ஸி இயக்குகிறார்.
"நண்பர்கள் 5 பேர் தங்கள் காதலிகளுடன் விடுமுறையை கழிக்க பைக்கில் ஜாலியாக சுற்றுலா கிளம்புகிறார்கள். போகிற வழியில் ஒரு விபத்து நடக்க அருகில் உள்ள ஒரு தனிமையான பங்களாவில் தங்குகிறார்கள். அந்த பங்களாவில் உள்ள ஒரு அமானுஷ்ய சக்தி ஒவ்வொருவருக்கும் அவர்கள் சாகும் நாள், நேரத்தை சொல்கிறது. அதுவரை சந்தோஷமாக இருந்தவர்கள் தாங்கள் சாகும் நேரத்தை தெரிந்தவுடன் என்ன ஆகிறார்கள், எப்படி அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. ரஜினியின் தத்துவ வசனம்தான் படத்தின் மைய கரு. வாழும்போது மற்றவர்களை வாழவைத்து நாமும் சந்தோஷமாக வாழவேண்டும் என்கிற மெசேஜையும் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் டாவின்ஸி.