ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தியேட்டர்கள் பக்கம் ஏற்கெனவே, மக்கள் வருவதில்லை என்ற புலம்பல் திரையுலகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாகவே திருட்டு வி.சி.டியால் சினிமா ஒரு பக்கம் அழிந்து கொண்டு வருகிறது. இப்போது புதிதாக அதற்குப் போட்டியாக வீடியோ விமர்சனங்களும் முளைத்துள்ளன. இப்படி கிளம்பியுள்ளவர்களிடமிருந்தும் சினிமாவைக் காப்பாற்ற படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் போராட வேண்டியுள்ளது.
ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் கண்டபடி சினிமாவைப் பற்றி கமெண்ட்டுகள் போட்டு ஒரு படத்தின் தரத்தைக் கெடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே என்பதை இதற்கு முன்னரும் பார்த்திருந்தோம்.
நேற்று யதேச்சையாக 'புலி வீடியோ விமர்சனம்' என இணையத்தில் தேடிய போது சுமார் 50க்கும் மேற்பட்ட வீடியோ விமர்சனங்கள் கண்ணில்பட்டன. இவர்கள் யார் எதற்காக விமர்சனம் செய்கிறார்கள், அந்த விமர்சனங்கள் தரமானவையா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோம் அதனால் நாங்களும் விமர்சனம் செய்வோம் என்ற ஒரு நிலைக்கு அவர்கள் பேசுகிறார்கள். இப்படியே போனால் இனி, தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களை விட விமர்சனம் செய்பவர்கள் அதிகமாகி விடுவார்கள் என்பதுதான் உண்மை. இன்று பலரும் தங்களை 'கிரிட்டிக்' என்று அவர்களாகவே அழைத்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் விமர்சனம் என்றாலே அதற்கென்று ஒரு தனி மரியாதையும் மதிப்பும் இருக்கும். எந்த ஒரு விஷயமும் பரவலாகும் போதும், எளிதாக மாறும் போதும் அதன் மீதான மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடும் என்பதே உண்மை. அப்படித்தான் இப்போது வீடியோ விமர்சனங்கள் ஆகிவிட்டன.
நல்ல ஒரு போன் இருந்தால் போதும் அதிலேயே வீடியோவை ஷுட் செய்து, யு டியூப் மூலம் பதிவேற்றி நாமும் விமர்சகர்களாகி விடலாம் என பலர் வந்துவிட்டார்கள். இதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் பெரும்பாலான விமர்சனங்கள் 'லைக்குகளுக்காகவும், ஹிட்ஸ்களுக்காகவும்' மட்டுமே செய்யப்படுகின்றன என்பதே உண்மை. குழாயடிச் சண்டையை விடவும் தரமற்ற முறையில் சில விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. ஒரு படத்தைப் பற்றி கேவலமாகப் பேசினால் அதிக லைக்குகளும், ஹிட்ஸ்களும் கிடைக்கும் என்பதே அவர்களுடைய நினைப்பாக இருக்கிறது.
இன்னும் இப்படி ஆயிரமாயிரம் வரட்டும், அப்போதுதான் தரமான ஒன்றிரண்டு மட்டுமே கடைசியாக மிஞ்சி நிற்கும், அது வரை படைப்பாளிகள் பொறுமையுடன் இருத்தலே நலம்.