தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும் இயக்குனருமான சீனிவாசன்.. குறிப்பாக சமூக பிரச்னைகளிலும் அரசியல் விவகாரங்களிலும், பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக தனது கருத்தை முன்வைப்பார் சீனிவாசன். கடந்த மாதம் கூட கொச்சின் கேன்சர் இன்ஸ்டிடியூட் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்த சீனிவாசன், அவர்களின் மோசடிகளை அம்பலமாக்கும் விதமாக அவற்றை படமாக எடுக்கப்போவதாகவும் கூறி அவர்களுக்கு கிலி ஏற்படுத்தினார்.
தற்போது ஒரு பேட்டி ஒன்றில், கேரளாவில் துணிச்சல் வாய்ந்த போலீஸ் அதிகாரியாக செயல்படும் ரிஷிராஜ் சிங் கேரளாவின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என அவர் கூறியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. யார் இந்த ரிஷிராஜ் சிங்..? கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளாவின் போக்குவரத்து அமைப்பு நரகம் என்று சொல்லும்படி நாளுக்கு நாள் அவலநிலை அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.. எல்லாம் போக்குவரத்து கமிஷனராக ரிஷிராஜ் சிங் பதவி ஏற்கும் வரைதான். ரிஷிராஜ் பதவியேற்றதும் சாட்டையை சுழற்ற இப்போது நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் குறைந்துள்ளன. விபத்துக்கள் பாதிக்குப்பாதியாக குறைந்தன.
அந்த சமயத்தில் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலே, தனது சமூக வலைதளப்பக்கத்தில், நீங்கள் தான் ரியல் ஹீரோ என்ற தலைப்பில் ஒரு பாராட்டுப்பத்திரமே வாசித்திருந்தார்.. கேரளாவை பொறுத்தவரை இவரது கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பலமுறை பல டிபார்ட்மென்ட்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.. ஆனால் எங்கு சென்றாலும் அந்த துறையில் உள்ள சீர்கேடுகளை களைந்து, அவற்றை தரம் உயர்த்துவது மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டவர் தான் ரிஷிராஜ் சிங். தற்போது கேரளாவில் போலீஸ் ஏடிஜிபியாக பணியாற்றுகிறார்.. அப்படிப்பட்டவர்தான் கேரளாவின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என சீனிவாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.