ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் அதிக படங்களை இயக்கியவர் ராம.நாராயணன். தனது தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் 70க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் என்.ராமசாமி தேனாண்டாள் பிலிம்சை நிர்வகித்து வருகிறார். சமீபகாலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தும், வாங்கி விநியோகித்தும் முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். தற்போதும் ருத்ரமாதேவி, அரண்மணை 2 படங்கள் அவர் கைவசம் உள்ளது.
ஆனால் ராமசாமியின் மனைவி ஹேமா இந்திராணிக்கு நாடகத்தின் மீது அலாதி ஆர்வம். சமீபத்தில் சில்லு, பட்டணத்தில் பூதம் என்ற இரண்டு நாடகங்களை தயாரித்து அரங்கேற்றினார். சில்லு நாடகத்தை பார்த்த கமலஹாசன் ஹேமாவை பாராட்டி மகிழ்ந்தார். அடுத்தடுத்தும் நல்ல நாடகங்களை தயாரிக்க இருக்கிறார். இதற்காக தேனாண்டாள் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளார்.
"நம்மை விட திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கும் ஹாலிவுட்டில் நாடகத்திற்கு தனி மரியாதை இருக்கிறது. பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள்கூட நாடகத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இங்கும் அப்படியான ஒரு சூழ்நிலை வரும் சாத்தியகூறுகள் தெரிகிறது. அண்மையில் நடத்தப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தின் வெற்றி அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நான் வெளிநாட்டில் பார்த்த நாடகத்தின் தொழிலநுட்பத்தோடு இங்கு நாடகத்தை நடத்துகிறேன். மிப்பெரிய டிஜிட்டல் எல்ஈடி திரையில் நாடகத்தின் பின்னணியை கொண்டுவந்தேன். மழை, வெயில், புயல், பூகம்பம் அனைத்தையும் மேடைக்கு கொண்டு வரமுடியும். நாடகத்தை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த கட்டமாக மற்ற நகரங்களிலும் நடத்த இருக்கிறோம்" என்கிறார் ஹேமா ருக்மணி.