வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் ஆக 29 பதவிக்கான போட்டிக்கு மொத்தம் 71 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆய்வில் அலாவுதீன், பாலகிருஷ்ணராவ், வாசுதேவன் ஆகிய 3 பேரின் மனுக்கள் போதிய ஆவணங்கள் இணைக்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 68 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் விஷால், சரத்குமார் அணி¬யைத் தவிர 10 பேர் சுயேட்சைகளாக மனு தாக்கல் செய்துள்ளர். வேட்புமனுவை வாபஸ் பெற வருகிற 7ந் தேதி கடைசி நாள், 8ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது.