ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஏடிதா நாகேஸ்வரராவ். 82 வயதான அவர் சுவாசகோளாறு பிரச்சினை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 20ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் இன்று நடக்கிறது. நாகேஸ்வரராவுக்கு ராஜா, ஸ்ரீராம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
வாழ்க்கை குறிப்பு
ஏடிதா.நாகேஸ்வரராவ் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொத்தபேட்டையை சேர்ந்தவர். நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். சினிமா வந்ததும் அதற்குள் வந்தார். சினிமாவில் டப்பிங் கலைஞராக இருந்தவர் தனது கடின உழைப்பால் பொருளீட்டி தயாரிப்பாளர் ஆனார். தேசிய விருது பெற்ற சங்கராபரணம், சாகரசங்கமம்(சலங்கைஒலி), சித்தாரா, ஸ்வம்யகிகுஷி, ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து), உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தார்.
தலுங்கு தயாரிப்பாளர் சங்க செயலாளர், நந்தி விருது கமிட்டி உறுப்பினர், தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர். சங்கராபரணம் டிஜிட்டல் படுத்தப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது. இதன் வெளியீட்டுக்கு வந்த நாகேஸ்வரராவ் "சங்கராபரணம் என்கிற ஒரு படம் என் வாழ்க்கையை பூரணபடுத்தி விட்டது" என்றார்.