தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
இரண்டு மாதங்களுக்கு முன் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் இயக்குனரான அஞ்சலி மேனனின் திறமை, உழைப்பு பற்றி வானளாவ புகழ்ந்தார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன்.. சரி அந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் அஞ்சலி மேனன், அதனால் புகழ்கிறார் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.. சில நிகழ்வுகள் ஏதேச்சையாக நடப்பது போல இருக்கும்.. ஆனால் நாம் தான் அதைவைத்து சூசகமாக யூகித்துக்கொள்ள வேண்டும்.. அதன்பின் சில நாட்கள் கழித்து பிரதாப் போத்தன் படம் இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதுவும் 18 வருடங்கள் கழித்து படம் இயக்குகிறார் என்பதால் அந்த செய்தியும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பின்னர்தான் அந்தப்படத்திற்கு அஞ்சலி மேனன் தான் ஸ்க்ரிப்ட் எழுதிகிறார் என்கிற விஷயம் மெதுவாக கசிந்தது.
இன்று பிரதாப் போத்தன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், துல்கர் சல்மானை வைத்து தான் படம் இயக்கப்போவதை உறுதி செய்துள்ளார். மேலும் அந்தப்படத்திற்கு அஞ்சலி மேனன் ஸ்கிரிப்ட் எழுதுவதையும், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதையும் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.. இந்த நிறுவனம் தான் சமீபத்தில் தங்களது 'லார்டு லிவிங்ஸ்டன்ன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தின் ட்ரெய்லரை விண்வெளிக்கு அனுப்பி ரிலீஸ் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.