ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' என மூன்று பெரிய படங்கள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின என்று சொன்னால் சிலர் அதிர்ச்சியடைவார்கள்! சிலர் அடிக்க வருவார்கள். எப்பய்யா இந்தப்படங்களை டிவயில் போட்டாங்க என்று சிலர் குழம்பிப்போவார்கள்.
இந்தத் தகவல் பொய்யில்லை, உண்மைதான். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலியின் 'பாகுபலி' படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்தின் அதிகாரபூர்வமான டிவிடி சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமாவில் நேற்று மாலை 6 மணிக்கு 'பாகுபலி' படத்தின் மலையாள பதிப்பு ஒளிபரப்பானது.
சூர்யா நடித்த ' 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படமும் சூர்யா மலையாள சேனலில் நேற்று மாலை ஒளிபரப்பப்பட்டது.
கேரளத்தில் இப்படி என்றால் ஆந்திராவிலோ அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'எந்தவானி காடு' பிரபல தெலுங்கு சேனலான மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது.