தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாரி படத்தை அடுத்து விஐபி-2 படத்தில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கடைசி சேரத்தில் தலைப்பை அறிவித்தால் அஜித் படத்துக்கு கிடைப்பதுபோல் கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற எண்ணத்தில் தலைப்பை அறிவிக்காமல் இருக்கிறாராம் பிரபு சாலமன்.
இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கும் வேடம் இதுவரை யாரும் நடிக்காத வேடம். அதாவது ஓடும் ரயிலில் சாப்பாடு சப்ளை செய்பவராக நடிக்கிறார். ரயில் பெட்டியில் நடைபெறும் காட்சிகள் 75 சதவிகிதம் இருப்பதால் இப்படத்துக்காக பின்னிமில்லில் ரயில் பெட்டிகள் செட்டும், ரயில்நிலைய செட்டும் போடப்பட்டது. அங்கே 60 சதவிகித படப்பிடிப்பு முடித்துவிட்டது. அடுத்து ரயில்நிலையத்தில் நிறைய காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை இப்போது விசாகபட்டிணத்தில் நடத்தி வருகிறார் பிரபு சாலமன்!
இங்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் மேற்பார்வையில் தனுஷ் சம்பந்தப்பட்ட ரயில் சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த சண்டைக்காட்சி இதற்கு முந்தைய ரயில் சண்டைக்காட்சிகளை மிஞ்சக்கூடிய அளவுக்கு இருக்குமாம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் டிசம்பர் மாதம் முடிந்து விடுமாம்.