இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் வாஞ்சையோடு அழைக்கும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நன்னுக்கு பிரேமதோ எனும் படத்தில் நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகின்றார். நன்னுக்கு பிரமதோ படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர்., அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் கொரடலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது இத்தகவலை மெய்ப்பிக்கும் வண்ணம் இப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மைத்திரி புரொடக்ஷன் பட நிறுவனத்தார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்னுக்கு பிரேமதோ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது. இப்படம் மட்டுமல்லாது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் இயக்குனர் கோபிசந்த் இயக்கவிருக்கும் படத்திலும் நாயகனாக நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம்.