தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். லண்டன் நடிகையான இவர், அதையடுத்து கெளதம்மேனன் இந்தியில் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ஏக் தீவானா தா என்ற படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் மறுபடியும் தமிழுக்கு வந்து தாண்டவம், ஐ படங்களில் நடித்துவிட்டு இப்போது விஐபி-2, கெத்து மற்றும் விஜய்யின் 59வது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்தியில் பிரபுதேவா, அக்ஷய்குமாரை வைத்து இயக்கி தற்போது திரைக்கு வந்துள்ள சிங் இஸ் பிளிங் என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் எமி ஜாக்சன். இப்படத்திற்கு பிறகு இந்தியில் எமி ஜாக்சனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாம். அவரது நடிப்பைப் பார்த்துவிட்டு சில பாலிவுட் பிரபலங்களே அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்களாம்.
மேலும், பிரபுதேவாவும் எமியின் பர்பாமென்ஸ், தொழிலில் அவர் காட்டும் ஆர்வம் குறித்து பாலிவுட் பேட்டிகளில் எமிக்கு புதிய படங்கள் கமிட்டாகும் அளவுக்கு பில்டப் கொடுத்து வருகிறாராம். அதோடு இந்த படமும் வெற்றிபெற்றிருப்பதால் மேலும் சில இந்தி படங்கள் எமிக்கு கிடைப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறதாம். அதனால், அடுத்தபடியாக இந்தியில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் எமிஜாக்சன்.