ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அசினைப்பற்றிய செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது சமந்தாவும் ஒரு சென்னை தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி சமந்தாவுக்கு தெரிய வந்தபோது அதிர்ச்சியாகி விட்டாராம். அஞ்சான், கத்தி படங்களுக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். அதற்குள் இப்படியொரு செய்தியா?என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியவர், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், சித்தார்த்துடன் நான் நட்பு வளர்த்து வந்தபோது, அதை காதல் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது எங்களுக்குள் எதுவும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. இதுமாதிரி சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு எத்தனையோ காதல், கல்யாண கிசுகிசுக்களை நான் சந்தித்து விட்டேன். ஆனால் எந்த கிசுகிசுவும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கவும் செய்யாது. காரணம் அவை எல்லாம் பொய்யான செய்திகள். அதனால் இந்த தொழிலதிபர் காதல் மேட்டரையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை எனறு கேசுவலாக பதில் கூறியுள்ளார் சமந்தா.