இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்பார்த்ததை விட அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. விஷால் தனது பலத்தை காட்ட நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டிக் காட்டினார். மண்டம் நிறைந்து வழியும் அளவுக்கு கூட்டம் கூடியது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் வந்திருந்தார்கள். 60 இளம் ஹீரோக்கள் மேடையில் தோன்றி தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். கமலஹாசன் நாசரை தலைவர் பதவிக்க முன்மொழிந்து தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். சிவகுமார், சத்யராஜ், வடிவேலு, போன்ற முன்னணி கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த எழுச்சி சரத்குமார் தலைமையிலான அணியை கலங்கடித்துவிட்டது. இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டிக்காட்ட அவர்களும் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறார்கள். சரத்குமார், ராதிகா, ராதாரவி, சிம்பு ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான நடிகர் நடிகைகளை சந்தித்து கண்டிப்பாக கூட்டத்துக்கு வந்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ராதாரவி அனைத்து ஊர்களுக்கும் தனது ஆட்களை அனுப்பி நாடக நடிகர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். விஷால் அணி கமலின் ஆதரவை பெற்று விட்டதால் சரத்குமார் அணி ரஜினி ஆதரவை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது. அனல் பறக்கும் இந்த தேர்தல் பணிகளை தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.