இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நேற்றுமுன் தினம் கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தேசத்தினாயி பாடு' என்கிற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சில பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். விழாவில் ஜேசுதாஸை பாடல் பாடுமாறு அனைவரும் கோரிக்கை வைக்க, அவரோ விடாப்பிடியாக பாட மறுத்துவிட்டார். இதனைக்கும் இந்த வருடம் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இசைக்கச்சேரி ஒன்றில் மேடையில் பாடினார் ஜேசுதாஸ்.
பின்னர் ஏன் அவ்வளவு வற்புறுத்தியும் பிடிவாதமாக பாட மறுத்துவிட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. அதுமட்டுமல்ல பள்ளி கிரவுண்டில் அவரை பார்க்க ஆவலாக இருந்த குழந்தைகளையும் அவர் பார்க்க முதலில் மறுத்துவிட்டாராம். பின்னர் போனால் போகிறதென்று காரிலேயே கிரவுண்ட் வரை வந்தவர், அங்கே முதல்நாள் பெய்திருந்த மழையால் சேறும் சகதியுமாக இருந்ததாலோ காரில் இருந்து இறங்காமல் கிளம்பிவிட்டாராம். அவரின் இந்த செயல், அவருடன் இணைந்து பாடலாம் என ஆவலுடன் அங்கே இருந்த குழந்தைகளின் மனதில் வருத்தத்தை உண்டுபண்ணிவிட்டது.