தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கடந்த சில நாட்களாக போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர். விஷாலின் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் பொருளார் பதவிக்கு கார்த்திக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர். சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு அவரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும், துணை தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இருஅணியிலும் தலா 24 பேர் செயற்குழு உறுப்பினருக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று காலை 11 மணிமுதல் ஆய்வு செய்யப்படுகிறது. ஓய்வுபெற்ற நீதிபதியும் தேர்தல் அதிகாரியுமான பத்மநாபன் முன்னிலையில் இந்த ஆய்வு நடக்கிறது. மாலையில் போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வருகிற 7ந் தேதி வரை போட்டியிலிருந்து விலகி கொள்கிறவர்கள் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 8ந் தேதி இறுதிபட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது.