டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமந்தாவை முதலில் அரவணைத்தது தெலுங்கு சினிமாதான். அதனால்தான் சென்னையில் இருந்த தனது முகாமை அவர் ஐதராபாத்துக்கு மாற்றினார். அதோடு அங்கு குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களின் கதாநாயகியாக உருவெடுத்த சமந்தாவின் பட எண்ணிக்கையை போலவே அவருக்கான ரசிகர்களும் படத்துக்குப்படம் அதிகரித்தனர். அவரது மிதமான கிளாமருக்கே அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளின் ரசிகர்கள் சமந்தா பக்கம் தாவினர். அதனால் ஆந்திரா சினிமாவில் சமந்தாவின் கொடி உயரத்தில் பறந்தது.
இருப்பினும், தமிழ் சினிமாவிலும் கோலேச்ச வேண்டும் என்பதற்காக நீதானே என் பொன்வசந்தம் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த சமந்தாவுக்கு அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு இங்கேயும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது, அஜீத், விக்ரம், தனுஷ் என மறுபடியும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதால், கூடிய சீக்கிரமே ஆந்திராவை விட தமிழில் தனக்கு ரசிகர்கள் அதிகரித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் சமந்தா, தெலுங்கு ரசிகர்களிடம் தனது நடிப்பு குறித்த நிறைகுறைகளை இணையதளத்தில் வரவேற்றவர், இப்போது தமிழ் ரசிகர்கள் கூறும் விமர்சனங்களையும் வரவேற்கிறாராம்.