இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை நயன்தாராவை தங்கள் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியில், அரசியல் கட்சிகள் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரமுகி, சிவாஜி, இது கதிர்வேலன் காதல், தனி ஒருவன், மாயா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா. பிரபல நடிகர்கள் சிம்பு, பிரபு தேவா ஆகியோருடன் காதல்வசப்பட்டவர். இருந்தாலும், தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து, இன்று வரையில், முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
ஈர்ப்பு:
அவர் கடைசியாக நடித்த, மாயா திரைப்படமும் வெற்றிகரமாக ஓட, தமிழ் சினிமா ரசிகர்களிடம், அவர் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த வாரம், சேலத்தில் நடந்த ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு சென்றார் நடிகை நயன்தாரா. அங்கு அவரை சந்திக்க, 5,000 பேர் எதிர்பாராதவிதமாக திரண்டதால், போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார், லேசான தடியடி நடத்தியதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நயன்தாராவுக்கு இப்படி தன்னிச்சையாக திரண்ட கூட்டத்தை கண்ட அரசியல் கட்சியினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாராவை, தங்கள் கட்சியில் இணைத்து, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.தி.மு.க., மற்றும் பா.ஜ., வட்டாரங்களில் தான், இந்த ஆலோசனை தீவிரமாக நடப்பதாகவும் சொல்கின்றனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். அவரை எதிர்கொள்ள வேண்டும் என்றால், பிரபலமான நடிகை ஒருவர் தேவை. அப்படியொரு எண்ணத்துடன் தான், சில ஆண்டுகளுக்கு முன், நடிகை குஷ்புவை கட்சி யில் இணைத்தனர். அவரும், கட்சிக்காக நிறைய பணியாற்றினார். ஆனால், அவரது வெளிப்படையான பேச்சு, கட்சி யில் இருக்கும் சில தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து, அவர் கட்சி யில் வெகு காலம் நீடிக்க முடியவில்லை. ஆனால், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி சிறப்பானது.அவர் இடத்தை நிரப்ப, ஒரு நடிகை அவசியம் தேவை. சமீபத்தில், சேலம் சென்றிருந்த நயன்தாராவுக்கு கூடிய கூட்டத்தை பார்க்கும்போது, அவரை கட்சிக்கு அழைத்து வந்தால், கட்சிக்கு பலம் சேர்க்கும். அதற்கான முயற்சியை சிலர் எடுத்துவருகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
விருப்பமில்லை:
இது குறித்து, நடிகை நயன்தாராவின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: சேலத்தில் இப்படியொரு கூட்டம் கூடும் என, நயன்தாராவே எதிர்பார்க்கவில்லை. சினிமாவில், இன்னும் பல ஆண்டுகள் நடிக்க விருப்பம் கொண்டிருப்பதால், அரசியலுக்குள் இப்போது நுழைய விருப்பமில்லை.கூட்டத்தை பார்த்தால், அரசியல் கட்சியினர் ஆசைப்படத் தானே செய்வர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -