இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது '24 AM STUDIOS' என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஆபிஸ் பூஜைபோட்டதோடு சரி. அதன் பிறகு அப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. பால்கி இயக்கும் ஹிந்திப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அந்தப் படத்தை முடித்துவிட்டு வந்த பிறகே அதாவது நவம்பர் மாதம்தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கும் என்பதே லேட்டஸ்ட் தகவல். அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு சவுண்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஏற்றிருக்கிறார்.
புலி படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றிய முத்துராஜ் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். இயக்குநர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இப்போது கதாநாயகி முடிவாகி விட்டது. பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் ஸ்ருதிஹாசனை கமிட் பண்ணி உள்ளனர்.
இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தின் சுரேஷ்தான் இப்படத்தின் இன்னொரு கதாநாயகி! அஜித் பாணியில் படத்துக்கு தற்போது பெயரிடப்படாமலே படத்தைத் தொடங்க உள்ளனர்.