தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பார்வதி(மேனன்) சினிமாவை விட்டு விலகப்போகிறார் என சமீபத்தில் ஊடகங்களில் பரவிய செய்தி, மலையாள ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. திறம்மையான நடிகையாக இருந்தாலும் சில வருடங்களாக மலையாள சினிமாவில் கவனிக்கப்படாமல் இருந்த பார்வதி, கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஆர்.ஜே.சாராவாக நடித்து ரசிகர்களின் மனதில் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.. சமீபத்தில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் காஞ்சனமாலாவாகவே வாழ்ந்திருந்த பார்வதியின் நடிப்பை பாராட்டாத ஜனம் பாக்கியில்லை.. சொல்லப்போனால் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் இப்போதுதான் துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கப்போவதாக செய்தி வெளியானதால் ரொம்பவே டென்சன் ஆகிவிட்டார் பார்வதி. சமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “சினிமா என்பது என் கனவு.. அதை நான் ரசித்து அனுபவித்து கொண்டிருக்கிறேன்.. சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என ஒருபோதும் சொல்லவே இல்லையே.. பின் ஏன் சில மீடியாக்கள் இப்படி செய்திகளை திரித்து வெளியிடுகின்றன.. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் குறைந்தபட்சம் என்னிடம் கேட்டு அதை உறுதிப்படுத்தியிருக்கலாமே.. நான் இப்போதும் மீடியா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்” என சீறியிருக்கிறார் பார்வதி. அப்படி சினிமாவைவிட்டு விலகுவதாக இருந்தால், தானே அந்த அறிவிப்பை தைரியமாக வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் பார்வதி.