'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகில் உள்ள சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் பாலா. 'பரதேசி' படத்திற்குப் பிறகு 'தாரை தப்பட்டை' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கரகாட்டக்காரர்களைப் பற்றிய இப்படத்தை வழக்கம் போல வித்தியாசமான படமாக பாலா இயக்கியிருப்பார் என்று நம்பலாம்.
சசிகுமார் இப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தமிழ் சினிமாவையும், தமிழ் ரசிகர்களையும் இயக்குனராகவும் நடிகராகவும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சசிகுமார். 2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்தை இயக்கி நடித்த சசிகுமார் 2010ல் 'ஈசன்' படத்தை இயக்க மட்டும் செய்தார். 2009ல் 'நாடோடிகள்' படம் மூலம் நடிகராக தனது வெற்றியைத் தொடர்ந்தவர் 2010ல் வெளிவந்த 'ஈசன்' படத்தில் இயக்குனராகத் தோற்றுவிட்டார். அதன் பின் இதுவரை வேறு எந்தப் படத்தையும் இயக்கவில்லை.
'நாடோடிகள்' படத்தில் நடிராகக் கிடைத்த வெற்றியை, தொடர்ந்து “சுந்தரபாண்டியன், குட்டிப்புலி' ஆகிய படங்களில் தக்க வைத்துக் கொண்டார். 'போராளி, பிரம்மன்' ஆகிய படங்கள் நடிகராக சசிகுமாருக்குத் தோல்விப் படங்களாகவே அமைந்தது. இயக்கவும், நடிக்கவும் செய்யாமல் தயாரிப்பாளராக மட்டும் 'பசங்க, தலைமுறைகள்' ஆகிய இரண்டு அற்புதமான படங்களைத் தமிழ்த் திரையுலகத்திற்கு தந்துள்ளார்.
இப்போது பாலா இயக்கத்தில், 'தாரை தப்பட்டை' படம் மூலம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பலனடைவார் என கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். கமர்ஷியல் வெற்றியோடு, நாயகனாகவும் சசிகுமாரின் அந்தஸ்து இந்தப் படம் மூலம் உயர வாய்ப்புள்ளது. அதை பாலா நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்பலாமா?