ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் அரசியல் புகுந்து விட்டதாக சரத்குமார் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நடிகர் நடிகைகள் போட்டியிடக்கூடாது என்று கட்சி தலைமை அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் சரத்குமார் அணியில் போட்டியிடுவதாக இருந்த தியாகு, குண்டு கல்யாணம், நடிகைகள் குயிலி, பாத்திமா பாபுவுக்கும், விஷால் அணியில் போட்டியிடுவதாக இருந்த ஜே.கே.ரித்தீஷ், சரவணன், அஜய்ரத்னம், ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் எந்த அணிக்கும் வேலை செய்யவும், பிரச்சாரம் செய்யவும் கூடாது என்றும் ஓட்டளிக்க மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். இது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.