ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் மகன்களின் ஒருவர் ஜீவா. யான் படத்தை அடுத்து திருநாள், கவலை வேண்டாம், போக்கிரி ராஜா ஆகிய படங்களில் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் திருநாள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே நயன்தாராவுடன் தான் நடித்த ஈ படத்தைப்போலவே இந்த படமும் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜீவா.
இப்படி சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஜீவாவின் பெயரில் சென்னையில் சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வகையில் சென்னை தாம்பரத்தில் உள்ள ராஜ கீழ்ப்பாக்கம் கே.எம்.சி கார்டனில் ஜீவாவின் பெயரில் 2697 சதுர அடியில் ரூ 1 கோடி மதிப்பில் ஒரு நிலம் உள்ளது. ஆனால் அதை யாரும் அடிக்கடி சென்று கவனிக்காததைப்பார்த்த சிலர் அந்த நிலத்தின் பெயரில் போலி பத்திரம் தயார் செய்து தங்கள் பெயரில் மாற்றிக்கொண்டார்களாம்.
இந்த தகவல் ஜீவாவுக்கு தெரிந்ததை அடுத்து தனது பெயரில் இருந்த நிலம் ஜெரால்டு சோபன் என்பவர் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளார். அதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், ஜீவாவின் பெயரில் இருந்த நிலத்தை தனது நிலம் என்ற கூறி ஜெரால்டு சோபனிடம் விற்பனை செய்த எலிசா ஆனந்தை என்பவரையும் தற்போது கைது செய்துள்ளனர். தற்போது ஆலந்தூர் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடந்து வருகிறது.