டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் அஜீத் நடித்த காதல் மன்னன் படத்தில் இசையமைப்பாளரானவர் பரத்வாஜ். அதையடுத்து அஜீத்-ஷாலினி இணைந்த அமர்க்களம் படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அப்படத்தில், சொந்த குரலில் பாட என்ற பாடலை ஷாலினியை சொந்த குரலிலேயே பாட வைத்தார் பரத்வாஜ். ஆக, அந்த படத்தில் நடித்தபோதே அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.
அதையடுத்து பூவேலி, பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜா கூட்டம், ஜெமினி என தொடர் ஹிட் கொடுத்து வந்த பரத்வாஜ், சுந்தர்.சியின்அரண்மனை படத்திற்கு பிறகு தற்போது ஆயிரத்தில் இருவர் என்ற படத்திற்கு இசையமைக்க கமிட்டானார். ஆனால் அந்தபடமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, அஜீத், விக்ரம், பிரசாந்த் என பலருக்கு ஹிட் கொடுத்த பரத்வாஜ், இப்போது சரியான படமே இல்லாத நிலையில் இருக்கிறார்.
இதுபற்றி அவரைக் கேட்டால், சினிமாவில் பிசியாக இருந்த எனக்கு இப்போது சரியான வாய்ப்புகள் இல்லை. ஆனால் என்னால் எந்த மாதிரி கதைகளுக்கேற்ற இசையையும் கொடுக்க முடியும். குறிப்பாக, இப்போதைய இளவட்ட ரசிகர்கள் பாடல்களை கேட்டு ரசிப்பதை விட பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆனால் என்னால் அவர்களை கேட்டு ரசிக்கவும் வைக்க முடியும். குறிப்பாக, அஜீத்துக்கு காதல் மன்னன், அமர்க்களம் படங்களில் மெகா ஹிட் கொடுத்தேன். அந்த வகையில் இப்போது அவர் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் சூப்பர் ஹிட் பாடல்களை என்னால் கொடுக்க முடியும். அதனால் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என்கிறார் பரத்வாஜ்.