'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை காட்டிலும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தமுறை தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான இளம் அணியினரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியின் பாண்டவர் அணியினரின் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது... பாண்டவர் அணி என்று பெயர் வைத்ததே சிவக்குமார் தான். நீங்கள் ஒரு யுத்தத்திற்கு போகிறீர்கள் நல்லதே நடக்கும் என்று கூறி வாழ்த்தினார். சரத்குமார் அணியுடன் போரை சந்திக்க உள்ளோம். மூன்று வருடம் உங்களுக்காக இந்த அணி உழைக்க போகிறது. நம்பிக்கையுடன் நாங்கள் செயல்படுவோம் என்றார்.
ஒன்று திரண்ட இளம் நடிகர்கள்
விஷால் அணிக்கு ஆதரவு தெரிவித்து இளம் நடிகர்களான ஜெயம் ரவி, ஆர்யா, சந்தானம், சித்தார்த், விக்ராந்த், விமல் ரமணா, சாந்தனு பாக்யராஜ், ஷக்தி வாசு உள்ளிட்ட இளம் நடிகர்கள் அனைவரும் மேடையில் ஒன்று திரண்டு தங்களது ஒட்டுமொத்த ஆதரவையும் விஷால் அணிக்கு தெரிவித்தனர்.