டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதுள்ள தலைவர் சரத்குமார், ராதாரவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இரு அணியினரும் தவீரமாக ஓட்டுசேகரிப்பிலும், ஈடுபட்டுள்ளனர். சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் நாசர் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர இரு அணியினரின் மற்ற உறுப்பினர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் விஷால் அணியினரின் அறிமுக கூட்டம் சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விஷால் அணியினர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு... இங்கே நாம் அனைவரும் கலை உணர்வுடன், ஒரு சுப காரியத்திற்காக இங்கு கூடியுள்ளோம். நான் எத்தனையோ படங்களில் காமெடி செய்திருக்கிறேன். அதில் ஒரு படத்தில், அய்யா என் கிணற காணோம் என்று காமெடி செய்வேன். அதேப்போன்று இப்போது நமக்கு சொந்தமான ஒருவீடு நடிகர் சங்கம், அந்த நடிகர் சங்கம் இப்போது காணாமல் போய்விட்டது. அதை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.
இப்போது இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டால் நோட்டீஸ் அனுப்பி அவதூறு பரப்புகிறார்கள். அந்த அணியில் இருப்பவர்கள் எல்லாம் இந்த அணிக்கு வந்துவிடுங்கள், நிச்சயமாக இந்த அணி ஜெயிக்கும் என்றார்.