கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகையும், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தென்னிந்திய நடிகர் சங்கம் பாரம்பரியமிக்கது. மற்ற மொழிகளில் தனித்தனி சங்கம் தொடங்கிவிட்ட போதும் நாம்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று வைத்து அனைவரையும் அரவணைத்துச் செல்கிறோம். தற்போது நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் இரண்டு அணிகளாக பிளவுபட்டு பல்வேறு கருத்து வேறுபாடு செய்திகள் பத்திரிக்கையில் வந்த வண்ணம் இருக்கிறது.
இது நீடித்தால் எல்லா நடிகர்களுக்குமே இழுக்கு ஏற்படும். சரத்குமார் தலைமையில் அனுபவம் பெற்றவர்கள், விஷால் அணியில் இளைஞர்கள் இருவருமே சங்கத்தின் நலனுக்காத்தான் பாடுபடுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பல்லாண்டு கால அனுபவம் வாய்ந்தவர்களை இளைஞர்கள் சிறுமைப்படுத்துவதோ, அனுபவஸ்தர்கள் இளைஞர்களை உதாசீனபடுத்துவதோ ஏற்ககூடியதல்ல. இருதரப்பிலுமே நியாமான கருத்துக்கள் இருக்கிறது. யாருக்கும் தவறான நோக்கம் இல்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பிரிந்து நிற்க வேண்டும். இணைந்து செயல்படும் சாத்தியகூறுகள் பற்றி ஆராயலாமே?
இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாவது புதிதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்கள் சங்கத்தில் இதுபோன்ற பிர்ச்சினை ஏற்பட்டபோது பாரதிராஜா, என் கணவர் ஆர்.கே.செல்வமணி பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் முன்முயற்சி எடுத்து சிக்கலை தீர்த்து வைத்தார்கள். அதேபோன்று தற்போது மூத்த கலைஞர்களான ரஜினியும், கமலும் இணைந்து அதுபோன்ற ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ரோஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.