அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
என்னுடைய கதையை திருடி படம் எடுத்துவிட்டார்கள் என பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படங்கள் மீது, வழக்கு தொடர்வது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவிலும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இப்படித்தான் 'த்ரிஷ்யம்' கதை தன்னுடையது என ஒருவர், இயக்குனர் ஜீத்து ஜோசப் மீது வழக்கு தொடர்ந்து, அதில் தோல்வி கண்டார். 'ஆதாமிண்டே மகன் அபு' படத்திற்காக தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனர் சலீம் அஹமது சமீபத்தில் அப்படி ஒரு நபர் தொடுத்த வழக்கில் இருந்து மீண்டதுடன் வழக்கு தொடர்ந்தவரையே வழக்கில் சிக்கவைத்துள்ளார்..
தற்போது சலீம் அஹமது மம்முட்டியை வைத்து 'பாதமாறி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தின் கதை தான் எழுதி, ஒரு மலையாளம் நாளிதழில் வெளியான சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.. உடனே சலீம் அவர் எழுதிய சிறுகதையை தேடிப்பிடித்து வாசித்தபோது அவருக்கு சட்டென பொறி தட்டியது. அதாவது அந்த சிறுகதையும் கூட பல வருடங்களுக்கு முன் டிவி,கொச்சுபாவா என்பவர் எழுதிய நாவல் ஒன்றை தழுவித்தான் எழுதப்பட்டிருந்தது.
இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சலீம் அஹமது.. இரண்டையும் கவனமாக பரிசீலித்த நீதிமன்றம் சலீம் அஹமது பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால் சலீம் அஹமது தங்கள் மீது வேண்டும் என்றே பொய்வழக்கு தொடுத்ததாக கூறி அந்த என்.ஆர்.ஐ நபர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு திருப்பி வழக்கு தொடர்ந்துள்ளாராம். வேண்டுமென்றே பொய் வழக்கு போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்கிறார் சலீம் அஹமது.