டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தாவின் வீட்டில் சோதனை நடந்த போது அதைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஒன்றின் கேமராவை சமந்தாவின் சகோதரர் தள்ளி விட்டதும், அடித்ததுமான சம்பவம் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடியோ காட்சிகள் வேகமாகப் பரவி செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அந்த சம்பவத்தையடுத்துப் பேசிய சமந்தாவின் தந்தை, “நாங்கள் இங்கு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இங்கு சமந்தா எப்போதாவதுதான் வருவார். அவருடைய சம்பாதியத்தில் நாங்கள் எதையும் அனுபவிப்பதில்லை. அவர் இங்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் எங்களை இழுக்காதீர்கள்,” எனப் பேசினார்.
சமந்தா அவருடைய பெற்றோரைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை என்றால், அவர் ஷுட்டிங் செல்லும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெற்றோருடன் இருப்பதில்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமந்தாவிற்கு பல்லாவரம் வீடு தவிர சென்னையின் முக்கியப் பகுதி ஒன்றில் மற்றொரு வீடும், ஹைதராபாத்தில் இன்னொரு வீடும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவின் தந்தை அளித்த பேட்டி திரையுலகத்தினரிடமும், மீடியாக்களிடமும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் இல்லாமல் சமந்தா தனியாக வசிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றிய விளக்கத்தை சமந்தா அளித்தால்தான் அவர் தந்தை பேசியதற்கான அர்த்தம் சரியாக விளங்கும்.