பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னயில் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாட்டு அரண்மனையில் நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அரண்மனையில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். தன் வளர்ப்பு மகனின் சுவீகாரத்தை ரத்து செய்து அவர் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்று எம்.ஏ.எம்.ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் வழக்கு முடியும்வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் வசிக்கும் பகுதியில் கபாலி படப்பிடிப்பு நடத்த எம்.ஏ.எம்.ராமசாமி அனுமதியளித்துள்ளார். இதற்கு முத்தையா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
நேற்று காலை ரஜினி செட்டிநாட்டு அரண்மனைக்கு கோட்சூட் போட்டு ஸ்டைலாக காரில் இருந்து இறங்கி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த முத்தையாவின் வழக்கறிஞர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் படப்பிடிப்பை நிறுத்த முடியாது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக முத்தையா தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.