பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் வெற்றியால் கேரளாவே விழா கொண்டாடிக்கொண்டிருக்க, படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக விளங்கிய பார்வதி மேனனோ கொஞ்சநாளைக்கு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவ செய்துள்ளாராம். எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் அது எந்த நடிகரோட படமாக இருந்தாலும் நோ சொல்கிற அதிரடியான நடிகை தான் பார்வதி மேனன். இல்லையில்லை மேனன்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்ட தைரியமான 'பார்வதி'.
படங்களில் நடிப்பது, விழாக்களில் கலந்துகொள்வது, மேக்கப் போட்டுக்கொள்வது என எதிலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. நடிக்க வந்த இத்தனை வருடங்களில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை பத்துக்குள் தான். இதிலேயே தெரிந்துவிடும் நடிப்பை பற்றிய அவரது மனோபாவம் என்னவென்று. இப்போது திரையுலகை விட்டு ஒதுங்க இவர் முடிவு செய்திருப்பது, படிப்பதற்காகவோ அல்லது திருமணத்தை முன்னிட்டோ அல்ல. சமீபத்தில் தான் நடித்த, அதாவது மனதளவில் வாழ்ந்த கேரக்டர்களின் பாதிப்பில் இருந்து மீண்டு, புதிய பார்வதியாக இல்லையில்லை பழைய பார்வதியாகவே மீண்டும் நடிக்க வரவேண்டும் என நினைக்கிறாராம்.
அந்த அளவுக்கு அவர் ஏற்று நடித்த கேரக்டர்கள் மனதளவில் அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டனவாம். தற்போது அவர் கைவசம் 'பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக்கும், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துவரும் 'சார்லி' படமும் மட்டுமே உள்ளன. ஒரு படம் ஹிட்டானால் அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸை வாரிக்குவிக்கும் நடிகைகளின் மத்தியில் பார்வதி ரொம்பவே வித்தியாசமானவர் தான்.