பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கவனம் எல்லாம் இப்போது பாகுபலி-2 ரிலீஸில் தான் என்றாலும் அடுத்தடுத்த அவரது மெகா பட்ஜெட் புராஜெக்ட்டுகளும் வரிசைகட்டி நிற்கின்றன. அதில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகிய இருவரையும் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கவுள்ளார் ராஜமவுலி. ஆனால் இதையெல்லாம் தாண்டிய மெகா பட்ஜெட் படம் இயக்கும் திட்டத்தைத்தான் தனது கனவுப்படமாக இலக்கு நிர்ணயித்துள்ளாராம் ராஜமவுலி.. அப்படியென்றால் பாகுபலியை போலவா..? ம்ம்ஹூம்.. இது அதுக்கும் மேல.. படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாயாம். இந்தப்படத்திற்கு 'கருடா' என பெயரையும் முடிவு செய்து விட்டாராம் ராஜமவுலி.
இந்தப்படத்தில் கதாநாயகனாக இளம் முன்னணி ஒருவர் நடித்தாலும் கூட படத்தின் மிகப்பிரதான கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்.. அனேகமாக இது மகாபாரத கதையில் ஒரு பகுதியை தழுவி எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று சொலப்படுகிறது. இதற்கான வேலைகளில் தனது டீம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ளாராம் ராஜமவுலி. தான் மோகன்லாலின் தீவிர ரசிகன் என்று அவ்வப்போது கூறிவந்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கொச்சியில் நடைபெற்றபோது, மோகன்லாலை வைத்து படம் இயக்கும் தனது ஆசையை வெளியிட்டார். அடுத்து அதை நிறைவேற்றவும் தயாராகிவிட்டார்.. ஆனால் என்ன.. அதற்கு கொஞ்ச காலம் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்.. அவ்வளவுதான்.