பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நரேன், சிருஷ்டி டாங்கே, சூரி நடித்துள்ள கத்துக்குட்டி படம் இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. "வீரமா வர்ற புலியையும் பாருங்க, ஓரமா வர்ற எங்களையும் பாருங்க" என்று கேட்சிங்காக விளம்பரமும் செய்திருந்தார்கள். ஆனால் தற்போது படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
படத்தை திரையிட தடைகேட்டு நிலா சாட்சி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர்பீர் என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஓன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள கத்துக்குட்டி படத்தின் தயாரிப்பாளர் ராம்குமார் எங்கள் நிறுவனத்துன் கடந்த மார்ச் மாதம் கடன் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தந்த பிறகே படத்தை வெளியிட வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி பணத்தை தராமல் வெளியிட முயற்சிக்கிறார். அதனால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் "ஒப்பந்தப்படி மனுதாரருக்கு தரவேண்டிய பணத்தை டெபாசிட் செய்துவிட்டு படத்தை வெளியிடலாம். இல்லாவிட்டால் படத்தை வெளியிட இரண்டு வாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று அறிவித்தது. இதனால் இன்று வரவேண்டிய படம் வெளிவரவில்லை. இதனால் படத்தின் இயக்குனர் சரவணனும், ஹீரோ நரேனும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.