ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கத்தார் நாட்டைச் சேர்ந்தது தோஹா வங்கி. இதன் தலைமை செயல் அதிகாரியாக கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் சீத்தராமன் இருக்கிறார். இந்த வங்கிக்கு மும்பை மற்றும் கொச்சியில் கிளை உள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் கிளை தொடங்க உள்ளது. இதையொட்டி இந்தியா, கத்தார் பரஸ்பர வர்த்தக வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம் ஒன்றை தோஹா வங்கி சென்னையில் நடத்தியது. இதற்காக சென்னை வந்திருந்த அதிகாரி சீத்தராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
கத்தார் நாடு உலகின் செல்வ செழிப்பான நாடுகளில் ஒன்று. அடுத்த ஆண்டு உலக கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்புள்ள நாடு. அங்குள்ள இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. தற்போது கத்தார் நாட்டில் உள்கட்டமைப்புகள் மிக பெரிய அளவில் நடைபெறுவதால் விமானம், கப்பல், ரயில், தரைவழி தொழில்களும் உணவகங்கள், சினிமா, வணிக தளங்கள், குடியிருப்புகள், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி போன்ற அனைத்து துறைகளிலும் எண்ணற்ற தொழில் வாய்புகள் காத்திருக்கிறது.
சினிமா துறையிலும் கத்தார் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நிறைய தமிழ் படப்பிடிப்புகள் அங்கு நடக்கிறது. இங்கிருந்து அங்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடக்கிறது. தமிழ் படங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் நல்ல பங்குதாரர்களோடு வந்தால் அவர்கள் படம் தயாரிக்கவும் நாங்கள் கடனுதவி செய்ய தயராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.