'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் கன்னடப் படத்தில் சுதீப், நித்யா மேனன் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரே நேரத்தில் கன்னடம், தமிழ் மொழியில் தயாராகிறது. நான் ஈ, புலி படங்களில் வில்லனாக நடித்துள்ள சுதீப் ஹீரோவாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது.
போக்கிரி , பூஜை படங்களில் நடித்த முகேஷ் திவாரி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். எதிர் நீச்சல், பாண்டியநாடு'படங்களில் நடித்த சரத் லோஹித்சுவா மற்றொரு வில்லனாக நடிக்கிறார். மற்றும் நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார், லதா ராவ், சிக்கன்னா, சதிஷ், சது கோகிலா, தபலா நானி, வீனா சுந்தர், சங்கீதா, இமான் அண்ணாச்சி, கவுதமி, விச்சு, இயக்குநர் ரங்கநாதன், பரத் கல்யாண், சேட்டன், ராம், பிரசன்னா, பிரவீண், வரதன், மாஸ்டர் துருவ் என மிகப்பெரிய கன்னட, தமிழ் நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது.
இந்தப் படத்தின் கன்னட பதிப்புக்கான படப்பிடிப்புகள் பெங்களூரில் நடைபெற்று முடிவடைந்தது. தமிழ் பதிப்புக்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை அம்பத்தூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுதீப், நித்யா மேனன், நாசர் மற்றும் ஏராளமான துணை நடிகர் நடிகைகள் கலந்து நடித்து வருகிறார்கள்.தொடர்ந்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.