மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஈழ ஊடகவியலாளரான இசைப்ரியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் - போர்க்களத்தில் ஒரு பூ. சில மாதங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டது தணிக்கைக்குழு. சான்றிதழ் தர மறுத்தது மட்டுமல்ல, இசைப்ரியா கற்பழிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறதா என்ற அபத்தமான கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டதாம். தணிக்கையில் மேல்முறையீடு செய்யப்பட்டு டெல்லியில் உள்ள உறுப்பினர்கள் போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு சான்றிதழ் தர முன்வந்தநிலையில், சிலர் ஏற்படுத்திய குழப்பத்தினால் கடைசி நேரத்தில் சான்றிதழ் மறுக்கப்பட்டது. அதன் மூலம் போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனிவா சென்று அங்கு கடந்த ஒரு வாரமாக பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரிநிதிகளை சந்தித்து பரப்புரை செய்து வருகிறார் போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இயக்குநரான கு. கணேசன். அவரது பரப்பைரைக்கு தற்போத முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் தீர்மானம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டுமென்று தணிக்கை குழுவினர் சொன்னதை இயக்குநர் ஏற்கவில்லை. தற்போது அந்தக் காட்சியை நீக்காமலே திரையிடப்படுகிறது.